வாசிக்க கிடைத்த போது

வாசிக்க கிடைத்த போது
வாய் ரசிக்க சிறிப்பாய்
வா வா என்று…
எப்போதுமே உனக்கதிகம்தான்
பிடிவாதம்.


முரண்பாடுகள் தோன்றியே
உடன்பாடுகள் தோன்றியது.
ஆனாலும் நீர்
உடன் பட்டாலும்
முரண்பட்டே வாழ்கிறீர்.

மறந்து போனவன்
மறுபடியும் வரமாட்டான்
மனமுடைந்து போனவன்
மனம் தேடியே வருவான்.

நான் நட்புக்குள்
ஒரு பைத்தியம்
அதுவே
எனக்கு வைத்தியம்

என்னை
ஆபத்துக்குள் அழைக்காதீர்.
அன்புக்கு ஆபத்தென்றால்
நானே ஓடி வருவேன்.

நான் நட்புக்கு
தகுதி இல்லாதவனா?
நட்பு எனக்கு
தகுதி இல்லாததா?
சொல்லுங்கள்.

அப்படியில்லை
அன்பில்,குணத்தில்
பாசத்தில்,நேசத்தில்
நீங்கள் நல்லவர்தான்
என்னிலுமிக்க

நட்பை புரிந்து கொள்ள
நான் பழக்கப்பட வில்லையா?
நீங்கள் பழக்கப்பட வில்லையா?
சொல்லுங்கள்.

புரிந்த யாத்திரையும்
புரியாத பிடிவாதத் திரையும்
உங்களுடையதா?
என்னடையதா ?
சொல்லுங்கள்.

அகத்திற்கு பின் பேசாமல்
தன் மௌனத்தையோ
மன வலிகளையோ
முகத்தில் பேசுவது
தவறுதானோ? சொல்லுங்கள்.

தவறான இடத்தில்
நட்பை நீட்டியவர்
நீங்களா? நானா?
சொல்லுங்கள்.

தவறாக நம்பி
ஏமாந்தவர் நானா? நீங்களா?
சொல்லுங்கள்.

நீங்கள்தான் சரியாகருக்கலாம்
நான் தப்பானவனாகி
காரணம் உங்களை
தேடி வந்தவன்
நானல்ல?

நீங்கள்தான் சரியாகருக்கலாம்
நான் தப்பானவனாகி
காரணம் நீங்கள்
சென்ற முன்னேற்ற
பாதையை அடைத்தவன்
நானல்ல?

நீங்கள்தான் சரியாகருக்கலாம்
நான் தப்பானவனாகி
காரணம் நீங்கள்
சாப்பிட்ட பாத்திரத்தில்
மண் போட்டவன்
நானல்ல?

நீங்கள்தான் சரியாகருக்கலாம்
நான் தப்பானவனாகி
காரணம் உங்கள்
ஒற்றுமையை பிரிப்பவன்
நானல்ல?

நீங்கள்தான் சரியாகருக்கலாம்
நான் தப்பானவனாகி
காரணம் உங்களுக்கு
நஞ்சூட்டுபவன்
நானல்ல?

நீங்கள்தான் சரியாகருக்கலாம்
நான் தப்பானவனாகி
காரணம் நீங்கள்
குடித்த பாத்திரத்தை
தட்டி பறித்தவன்
நானல்ல?

நீங்கள்தான் சரியாகருக்கலாம்
நான் தப்பானவனாகி
காரணம் வாக்களித்து
மாறு செய்பவன்
நானல்ல?

நீங்கள்தான் சரியாகருக்கலாம்
நான் தப்பானவனாகி
காரணம் ஏமாற்றுபவன்
நானல்ல?

யாரும் என்ன செய்ய?
மனங்களுக்காக மனதை
கோழையாக வளர்த்து விட்டேன்
அதனால் நீங்கள்தான்
வேற்றி பெருவீர்

இந்த பிரபஞ்சமே
எனக்கு தேவையில்லை
மறு பரபஞ்சத்திற்காகவே வாழ்கிறேன்.

வாழ்க்கையில் நீங்கள் மட்டும்
வெற்றி பெருங்கள்
தோல்வி கூட எனக்கு
நாளை வெற்றிதான்.

உங்களை ஆதரித்து
எத்தனையோ கைகள் உயரும்
என்னை ஆதரிக்க
நானே உயர்த்த வேண்டும்.

அவ்வளவுக்கு வாழ்க்கையில்
பலருக்கு அநியாயம் செய்து விட்டேன்.

பலரை நான் தேடிச் செல்வேன்
என்னை தேடி யாரும் வரமாட்டார்கள்.
மிஞ்சிய கொடுமைக்காரன் நான்.

அனுபவப்பட்ட என்
வாழ்வுக்கு தெரியும்
உடன் இருந்தவர் கூட
ஊரர்களாக மாறுவார்கள். என்று…

அதற்காக…
நான் என்னுடன்
இருப்பவனை, இருப்பவரை விட்டு
மாறுவதில்லை…

எனக்கு என்றால்
உப்புக்கூட இனிக்கும்
சக்கரைகூட உவர்க்கும்.

விழுந்து எழுந்த
என் கால்களுக்கு புரியும்
செருப்பில்லாது என் பாதங்கள்
நணைய வில்லை
சேரடித்து தள்ளி விட்டார்கள். என்று…

நீங்கள் விதையில்லாது
பயிர் கண்டவர்கள்
நான் பிறந்ததிலிருந்து
தோல்வியை விதையாகவே
காண்கிறேன்.

என் தேடல்
பணத் தேடலல்ல
மனத் தேடல்
இதுவரை அலைந்து தேடுகிறேன்.

பணத்தினை கடன் வாங்கிடலாம்
மனத்தினை எங்கே வாங்கலாம்.?



பணமென்றால் மதிக்கும் மனிதன்.
என்னிடம்
பணமுமில்லை,மனமில்லை
என்பதனாலா மிதிக்கிறார்கள்.?

நீராக மாறிவரும் உலகில்
அடுத்த நூற்றாண்டில்
நானிருக்க மாட்டேன்
நீங்கள் வாழ்வீர்கள் போலும்.

நட்பை நினைக்கும் போதே
நாவால் பேசிய
பெருமையும் புரிகிறது
அவர்கள் பேசிய வெறுமையும்
தெரிகிறது.

என்னைக் கண்டு
நீ பயந்தால்
உன்னையே நீ பயப்படுகிறாய்
அதுவே அர்த்தம்
நான் நீயாவே வாழ்ந்தேன்.

என்ன செய்ய?
உண்மைக்கும் நன்மைக்கும்
உலகம் வைத்த பெயர்தானே
தோல்வி…
உடம்பில் இன்னும்
ஓடிக் கொண்டுதான் இருக்கிறது.

நீ நானில்லாமல்
ஒரு வருடமென்ன?
காலமெல்லாம் வாழ்வாய்
என்னால் வாழ முடியும்
மறு உலகில்.

வேண்டாம் சகோதரா
இந்த அலட்சிய
விளையாட்டு மட்டும்
வேண்டாம்…

உனக்கு பிடித்ததோ
அலட்சிம்
அது எனக்கு
அறவே பிடிக்காதென்று
இவ்வளவு காலமும்
உனக்கு தெரியாதா?

நீ பழகிய
நட்போ,தோழோ
இதுவரை புரியாதா?

கைதட்டி சிறித்தார்கள்
எதிரிகள்.
நாடகம் பார்த்தார்கள்
நண்பர்கள்;
நீயுமானும்
பிரிந்த போது…

என்னோடு பழகினால்
தீ பாதைகளாலும்
பயணிக்க வேண்டிருக்கும்
பாசத்தை பகிர்வதற்கே
பயந்தால் எப்படி?
என்று கேட்டவர்களாக…

தூரத்திலிருந்து துயரத்தின்
நீர் வடிகிறது
துடைக்கத்தான் யாருமில்லை.

ஆனால்
நானே என்னை
துடைத்து கொண்டேன்.

விழுந்து எழுந்த கடலில்
முகம் நனைக்கவே
பயமாயிருக்கு
மூழ்கி விடுவேன் என்று…

ஆனால்
நம்பிக்கையாய்
நான்கு வார்த்தை சொல்லி
நடைமுறை செய்தால்
அனுபவத்துடன் அனுகிடலாம்.

உன் மீது குறு;றமில்லை
உன் அலட்சிங்களே
குற்றமாகியது…
அதை திருத்தி விட்டால்
திரும்பிடலாம்…

பிரிவு பற்றி பேசியே
பொழுது போக்கி விட்டீர்
பிரியம் பற்றி பேசியே
வாழ்ந்திடுவீர் என்றால்
வரவழைத்திடலாம்.

அன்று கொண்ட அச்சம்
ஆண்டாகியும் தீர வில்லையென்றால்
எதற்கு நட்பு
என்ற பெயரில் வேஷம்.
அதற்காகவே போனேன்.

உடலையும் மனதையும்
உள்ளிருந்தே தின்று விடும்
உம் தூரப் பார்வை

அலட்சியம் கலந்த சொற்களை
ஆற்றில் எரிந்து விட்டு
வருவதென்றால் வா!

மீண்டும் தலை நீட்டுகிறேன்
தலையாட்டுகிறேன்
உன் நட்புக்காக…

தர்க்கம் வேறு
தாகம் வேறு
இனிமேலாவது புரிந்து கொள்!
தாகமாய் நீ வா!

சில எதிர் பார்ப்புகளை
எதிர்த்திட கூடாது
ஏற்றுக் கொள்ள வேண்டும்
முடியாத நேரம்
சரியாக எடுத்து சொல்ல வேண்டும்
சுரி செய்வதற்காய்
எடுத்து வந்து சொல்லக் கூடாது

சுத்தம் செய்யும் சோம்பரியில்
சூனியத்தினால்
சுகம் தேடக் கூடாது
முன்னிப்பு கேட்கும் வெட்கத்தில்
பேசிய வார்த்தைகளை
மறைத்திட கூடாது

தாழ்ந்து போகிறோம்
என்ற கர்வத்தில்
துண்டிக்க கூடாது

நீ செய்தவைகளை
மன்னிக்கிறேன்
உனக்காகல்ல
எனக்காக…
அவனுக்காக…

உனக்கு நானோ
உனக்கு நீயோ
சுமையாகி வாழாமல்
துணையாகி வாழ்வோம் வா!


உன்னை நானோ
என்னை நீயோ
ஏமாற்றாமல்
ஏற்று வாழ்வோம் வா!

நான் துன்பம் செய்தால்
என்னை மன்னித்திடு

நான் ஆபத்தான
நகங்களை நறுக்க நினைத்தேன்
நீ விரல் வெட்டப்பட்டது
என்கிறாய்…

என்னை மன்னித்து விட்டாய்
என்பதன் முகவரியாய்
முதல் என் இலக்கத்திற்கே
அழைப்பு கொடு!

குயிலின் ஓசையாய்
உன் குரல் கேட்க
என் கைபேசி
காத்திருக்கிறது…

கருத்துகள் இல்லை: