உலக வரலற்றில்...

உண்மைக்கு எதிரி எண்ணிக்கை
நன்மைக்கு நம்மவர் தன்னிக்கை.
இதுவே உலக வரலாற்றில்.


அழகிய அன்பை அளிப்பவரை
காலை வெட்டி கவிழ்த்திடுவார்.

காலம் கடத்தி கழிப்பவரிடம்
காலை விட்டு கவிழ்ந்திடுவார்.

கஷ்டம் யாருக்கு?
கண்ணீரும் யாருக்கு?
நஷ்மும் யாருக்கு?

கவிழ்க்கப்பட்டவர் பரிதாபமானவர்
கவிழ்ந்து போனவர் கண்ணீருக்குறியவர்.
கட்டாயம் காட்சிப்பிர்.

பிரியப்பட்டே உன் குறை
உன்னிடம் சொல்வேன்.
ஆனால்...
உன்னிடம் சொல்லாது
பிறரிடம் சொல்பவரே!
உன் செல்வாக்குறியவர்.

நடிப்பவருக்கு குறை புரிவதில்லை
நம்பிக்கை வைத்தவருக்கே புரியும்.

பிணக்கும் வேண்டாம்
பிரச்சனையும் வேண்டாம்
பிரிந்திருப்பதே
பிரியத்தை விட பிடித்திருக்கு.

பிச்சையெடுக்கும் நிலை வந்தாலும்
உன் வாசல் நான் வரமாட்டேன்
நீ வரவழைக்காத வரை.

கருத்துகள் இல்லை: